Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 5, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவள்ளூர்: காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளரான இவர், திருவள்ளூரில் ஹார்டுவேர்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு திருவள்ளூர் அருகே உள்ளகூனிபாளையத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் ரூ. 7 லட்சத்தை கருணாகரனுக்கு கடனாக அளித்துள்ளார்.

வங்கியில் பணமில்லாமல்.. அந்த தொகையை கருணாகரன் காசோலைகளாக நாராயணமூர்த்திக்கு கடந்த 2020-ம் ஆண்டுதிருப்பி அளித்துள்ளார். வங்கியில் பணமில்லாமல் அந்த காசோலைகள் திரும்பியதால், நாராயணமூர்த்தி, கடந்த 2020-ம்ஆண்டு திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணை முடிவில் கருணாகரன் காசோலைமோசடி செய்தது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று திருவள்ளூர் விரைவு நீதிமன்ற நடுவர் செல்வரசி தீர்ப்பு அளித்தார்.

அத்தீர்ப்பில், காசோலை மோசடி செய்த குற்றத்துக்கு கருணாகரனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து விரைவுநீதிமன்ற நடுவர் தீர்ப்பளித்தார்.

நிபந்தனை ஜாமீன்: மேலும், ரூ.7 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் நாராயணமூர்த்தியிடம் கருணாகரன் திருப்பி அளிக்கவேண்டும் என உத்தரவிட்ட விரைவுநீதிமன்ற நடுவர், கருணாகரன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மாதத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியதோடு. அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்தார்.

.

Tags: கசலசயலளரககசறதணடனதரவளளரபதபஜகமசடமதமமவடடமறகவழககல
Previous Post

சரத் பவார் vs அஜித் பவார்: யாரிடம் ‘பவர்’? உண்மையான பலம் இன்று தெரியும்.. ஒரே நாளில் கட்சி கூட்டம்!

Next Post

Agriculture Aids : விவசாயிகளே! உங்களுக்கு இத்தனை சலுகைகளா? மானிய விலையில் நல்ல திட்டங்கள் – பயன்பெற அழைப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Agriculture Aids : விவசாயிகளே! உங்களுக்கு இத்தனை சலுகைகளா? மானிய விலையில் நல்ல திட்டங்கள் – பயன்பெற அழைப்பு

Agriculture Aids : விவசாயிகளே! உங்களுக்கு இத்தனை சலுகைகளா? மானிய விலையில் நல்ல திட்டங்கள் – பயன்பெற அழைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In