Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செங்கை- வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
செங்கை அருகே வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற திமுகவை சேர்ந்த சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் கைது
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுராந்தகம்: சென்னை, சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள புதிய குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் நிகமத்துல்லா. இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இவரது தொழிலின் பங்குதாரரான மகன் அக்பரும் இத்தொழிலை மேற்கொண்டு வருகிறார்.

இதில், செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவாடி கிராமத்தை சேர்ந்த கண்ணபிரான் என்பவருக்கு சொந்தமாக, அதேபகுதியில் சர்வே எண் 197/2-ல் உள்ள 3.36 ஏக்கர் நிலத்தை புதிய மனை பிரிவாக விற்பனை செய்ய அக்பர் பொது அதிகாரம் பெற்று விற்பனை செய்துள்ளார். பின்னர், நிகமத்துல்லாவும் இப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதில், மனை எண் 140-ல் உள்ள 474 சதுரடி மற்றும் மனை எண் 141-ல் உள்ள 602 சதுரடி உள்ள மனைகளில் வீடு கட்டுவதற்காக, சீவாடி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் திமுகவைச் சேர்ந்த அரங்கநாதனிடம், வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க கடந்த 5-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் ஒவ்வொரு மனை பிரிவுக்கும் தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் வழங்கினால் வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால், தொடர்ந்து ஊராட்சி தலைவரிடம் விண்ணப்பதாரர் அனுமதி கேட்டு வந்துள்ளார். எனினும், அனுமதி வழங்காமல் ஊராட்சி மன்ற தலைவர் தாமதப்படுத்தியுள்ளார். இதனால், ஊராட்சி மன்ற தலைவர் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸில் நிகமத்துல்லா புகார் அளித்தார்.

இதன்பேரில், சென்னையை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் வழக்கு பதிவு செய்தனர். மேலும், போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் சீவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து விண்ணப்பதாரரிடம் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதன் ரூ.30 ஆயிரம் பணம் பெற்றார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

.

Tags: அஙககரமஅரகஊரடசகதசஙகசரநதசவடதமகவதலவர..பறறமனறலஞசமவடடமனககவழஙக
Previous Post

யம்மாடியோவ்.. 2000 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த பொருள்! இத்தாலி கண்டுபிடிப்பு

Next Post

கணவனை கொன்று புதைத்துவிட்டேன்.. மனைவி தந்த வாக்குமூலம்.. மறுநாளே வந்து நின்ற கணவன்.. கேரளாவில் ஷாக்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கணவனை கொன்று புதைத்துவிட்டேன்.. மனைவி தந்த வாக்குமூலம்.. மறுநாளே வந்து நின்ற கணவன்.. கேரளாவில் ஷாக்

கணவனை கொன்று புதைத்துவிட்டேன்.. மனைவி தந்த வாக்குமூலம்.. மறுநாளே வந்து நின்ற கணவன்.. கேரளாவில் ஷாக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In