
நாகர்கோவில்: மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் சீவலப்பேரியைச் சேர்ந்த இளைஞரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், நாகர்கோவிலில் தங்கி நர்சிங் படித்து வருகிறார். இவருக்கும், திருநெல்வேலி அருகே சீவலப்பேரி மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (25) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது.

