லக்னோ: உத்தரப் பிரதேச சுகாதார தொழில்நுட்ப உச்சி மாநாடு 2023 லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய யோகி ஆதித்யநாத், திறமையும் திட்டமும் ஒன்றாக இணைந்தால், சிறந்த முடிவுகளை வழங்கி உலகிற்கே வழிகாட்டலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “உலக அளவில் அமெரிக்காவை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாகும். ஆனால், கொரோனா தொற்று காலத்தில் அமெரிக்காவை விட உயிரிழப்பு குறைவு. இதற்கு காரணம் சிறப்பான திட்டமிடலும், அதற்கான திறமையும்தான். இவை இரண்டும் இருந்தால் உலகத்திற்கே நம்மால் வழிகாட்ட முடியும். பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுதான் உத்தரப் பிரதேசம்.கொரோனா தொற்று காலத்தில் நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி விநியோகித்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான். இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளுக்கும் நாம் தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறோம். அதேபோல அமெரிக்காவால் செய்ய முடியாத விஷயங்களை கூட நாம் சிறப்பாக செய்து வருகிறோம்.
நாம் இன்னும் கூடுதல் முயற்சி எடுத்தால் இந்தியாவின் தலைவிதியையே தலைகீழாக மாற்றிவிடலாம்” என்று கூறியுள்ளார்.

