Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குடோன் உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.27 லட்சம் பொருட்களை கொள்ளை:- 13 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 12, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கோவையில் குடோன் உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.27 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த 13 பேர் கைது
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை: கோவையில் இரும்பு குடோன் உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.27 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வெள்ளலூர் சாலையைச் சேர்ந்தவர் முத்தையா (51). இவர், அதே பகுதியில் சொந்தமாக இரும்பு குடோன் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையி்ல், முத்தையா இரும்பு குடோன் வைத்துள்ள இடத்தை அதன் உரிமையாளர் விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்தையா, இடத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு, இந்த இடத்தை தானே வாங்கிக் கொள்வதாக தெரிவிக்க, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இடத்தை வாங்குவதற்காக முன்தொகையாக ரூ.50 லட்சத்தை உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அதன் பின்னர் நிலத்தின் உரிமையாளர் அந்த இடத்தை எழுதித் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி முத்தையாவும், அவரது உதவியாளரும் குடோனில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது 13 பேர் அடங்கிய கும்பல் குடோனுக்குள் நுழைந்தது. அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் முத்தையா வையும், அவரது உதவி யாளரையும் கட்டிப் போட்டனர். பின்னர், குடோனில் இருந்த இரும்புக்கம்பிகள், சிசிடிவி கேமராக்கள், 2 வாகனங்கள், டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.27 லட்சம். மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள், இருவரையும் மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக முத்தையா, சிங்காநல்லூர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரின் விசார ணையில், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியைச் சேர்ந்த பிரபு என்ற காலனி பிரபு(36), திருப்பூரைச் சேர்ந்த கண்ணன்(30), மதுரையைச் சேர்ந்த அஜ்மத்அலி, வீரபாரதி(21), பென்னி (19), மனோஜ்குமார் (19), வீரய்யா(27), பிரபு(24), சங்கர்(24), பாலமுருகன்(26), முகேஷ்(22), பார்த்த சாரதி(19), 16 வயது இளைஞர் ஆகிய 13 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 13 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

.

Tags: உரமயளரகடடபகடனகதகவயலகளளயடததபடடபரபரடகளர.27லடசம
Previous Post

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நல பாதிப்பு: தருமபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

Next Post

அங்கன்வாடி மைய அடிப்படை வசதிகளை உறுதி செய்க: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அங்கன்வாடி மைய அடிப்படை வசதிகளை உறுதி செய்க: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலர் கடிதம்

அங்கன்வாடி மைய அடிப்படை வசதிகளை உறுதி செய்க: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In