International oi-Hemavandhana
Published: Tuesday, July 11, 2023, 10:29 [IST]
லண்டன்: உடலுறவின்போதே ஒரு நபர் பரிதாபமாக இறந்துவிட்டார்.. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள் என்றாலும், இந்த துயர சம்பவம் மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய தோழியுடன் லாட்ஜில் ரூம் போட்டிருந்தார்.. உடலுறவில் ஈடுபட்டிருந்தபோதே, திடீரென சுருண்டு இறந்துவிட்டார். முதியவர்: சீனாவில்கூட ஒரு சம்பவம் நடந்து, பரபரப்பாக பேசப்பட்டுது.. சம்பந்தப்பட்ட பெண் விபச்சாரப் பெண் ஆவார். அவருடன் ஒரு முதியவர், உடலுறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது முதியவருக்கு மாரடைப்பு வந்து, ஸ்பாட்டிலேயே இறந்து விட்டார். அப்போது, அவரது ஆணுறுப்பானது, பெண்ணுறுப்புக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பெண்ணால் அங்கிருந்து நகரக்கூட முடியவில்லை.. உடனே மருத்துவமனைக்கு போன் செய்தார். இதையடுத்து விரைந்து வந்த மருத்துவனை ஊழியர்கள், இறந்த உடலையும், உடல் மீது இருந்த பெண்ணையும் அப்படியே தூக்கி ஸ்டிரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள்.. அதற்கு பிறகு அந்த சம்பவம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், உடலுறவின்போது ஏற்படும் மரணங்கள் மிகக் கொடுமையாக இருக்கின்றன. கார் பார்க்கிங்: இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில், மிகப்பிரபலமான மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வரும் அந்த பெண்ணின் பெயர் பெனலோப் வில்லியம்ஸ்.. 42 வயதாகிறது.. சமீபத்தில், மருத்துவமனையின் பின்புறமுள்ள கார் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், நோயாளி ஒருவர் இறந்துவிட்டார்.. அவரது இறப்பதற்கு இந்த நர்ஸ்தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. எனவே, இதற்கான விசாரணையை, அவரிடம் போலீசார் நடத்தி வருகிறார்கள்.. அப்போது, நர்ஸ் தன்னுடைய வாக்குமூலத்தில் சொன்னபோது, “பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்தபடி, நோயாளியிடமிருந்து அவசரமாக ஒரு அழைப்பு வந்தது.. அதனால் நான் அங்கு சென்றேன்.. அந்த காரின் பின்சீட்டில் நான் உட்கார்ந்தபடியே, நோயாளியுடன் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன்… அப்படி பேசிக்கொண்டிருந்தபோதுதான், நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்ளடார்” என்று போலீசாரிடம் நர்ஸ் வாக்குமூலத்தில் சொன்னார். போஸ்ட் மார்ட்டம்: இதனிடையே, அந்த நோயாளியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. ஆனால், அதில் உடலுறவின்போது மாரடைப்பு ஏற்பட்டதாக ரிப்போர்ட் வந்திருக்கிறது.. சம்பந்தப்பட்ட நோயாளிக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சை நடந்து வந்துள்ளது.. எனினும், நோயாளி என்றும் பாராமல், அவரிடம் இந்த நர்ஸ், சுமார் ஒரு வருட காலமாக நெருக்கமான உறவில் இருந்து வந்தாராம்.. இந்த விஷயம் மருத்துவமனையில் சக பணியாளர்களுக்கும் தெரியவந்துள்ளது.. உடனே இந்த நர்ஸை அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அவரே ஒரு டயாலிசிஸ் நோயாளி.. அவரிடம் உறவு கொள்ள வேண்டாம்.. விபரீதமாகிவிடும் என்று சொன்னார்களாம். ஆனாலும், இந்த நர்ஸ் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை.. உடலுறவு: சம்பவத்தன்று காரின் பின் சீட்டில், நோயாளியுடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.. அப்போதுதான் நோயாளிக்கு மாரடைப்பு வந்துள்ளது.. ஆனால், அப்போதுகூட இந்த நர்ஸ் பதறவேயில்லையாம்.. நெஞ்சுவலியில் அவர் துடிக்கும்போது, ஆம்புலன்ஸைகூட அழைக்கவில்லையாம்.. அவசர உதவி எதையும் நாடவும் இல்லையாம்.. தன்னுடைய சக பணியாளரை மட்டும், உதவிக்கு கூப்பிட்டுள்ளார்.. அந்த பணியாளர் ஓடிவந்து பார்த்தபோதுதான், நிலைமை விபரீதமானது புரிந்தது.. மாரடைப்பின் தீவிரத்தை பார்த்ததுமே, பயந்துபோன அந்த பணியாளர், எமர்ஜென்சிக்கு தகவல் தர சொன்னாராம்.. ஆனால், யாரை அழைத்தாலும், தன்னுடைய வண்டவாளம் வெளியே வந்துவிடும் என்பதால், தனக்கு பிரச்சினை ஏற்படாது தப்பிப்பதிலேயே அவர் மும்முரமாக இருந்திருக்கிறார்… அவ்வளவு நேரம் இழுத்துபிடித்து துடிதுடித்து கொண்டிருந்த உயிர், கடைசியில் பரிதாபமாக பிரிந்தே விட்டது.. பரிதாபம்: ஒருவேளை இந்த பெண், அந்த நபரை உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சை தந்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்.. ஆஸ்பத்திரியின் கார் பார்க்கிங்கில் இருந்தும் அந்த நபர் இறந்துவிட்டார்.. போலீஸார் இப்போது விசாரணையில் மொத்த உண்மைகளையும் வெளியே கொண்டுவந்துவிட்டடனர்.. இப்போது அந்த பெண், சட்டத்தின்பிடியில் உள்ளார். விசாரணைகள் அவரிடம் நடக்கிறது. ஆனாலும், போன உயிர் போனதுதானே..!!!
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Health Problem and Hospital Nurse arrested over affair with Dialysis Patient in the Car parking
Story first published: Tuesday, July 11, 2023, 10:29 [IST]

