
மேட்டூர்: எடப்பாடி அருகே வீட்டின் உரிமையாளர் உறங்கி கொண்டிருக்கும்போது மர்ம நபர் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி அடுத்த கொங்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (48). இவர் வீட்டின் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு சிவக்குமார், அவரது மனைவி மோகனா ஆகியோர் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். வீட்டின் உள் பகுதியில் பூட்டாமல் சாத்திவைத்த நிலையில், வைத்திருந்துள்ளார். இந்நிலையில், சிவக்குமார் வீட்டை கண்காணித்த சுமார் 25 வயது மதிக்கதக்க நபர், இன்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர், வீட்டின் கதவை திறந்து, உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணம் உள்ளிட்டவை திருடி விட்டு தப்ப முயன்றுள்ளார்.

