India oi-Mani Singh S
Published: Sunday, July 23, 2023, 14:33 [IST]
ஐதராபாத்: இன்ஸ்டாகிராமில் முதல் மனைவி போட்டிருந்த வீடியோவை பார்த்து ஜொள்ளுவிட்ட கணவனின் பிறப்பு உறுப்பை இரண்டாவது மனைவி பிளேடால் வெட்டிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. இன்ஸ்டா ரீல்சில் முதல் மனைவியின் வீடியோவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததால் கணவன் மீது கோபம் அடைந்த இரண்டாவது மனைவி, வீட்டில் இருந்த பிளேடை எடுத்து கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி வீசிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. வினோதம் கலந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள நந்திக்மா பகுதியை சேர்ந்தவர் கோடா ஆனந்த் பாபு. இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவதாக வரம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் அங்குள்ள முப்பல்லா கிராமத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனந்த் பாபுக்கு பொழுது போக்காக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. வீட்டில் இருக்கும் போது அடிக்கடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்து வந்துள்ளார். அப்படித்தான் சம்பவம் நடைபெற்ற அன்று ஆனந்த் பாபு இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டுள்ளர். எந்நேரமும் போனில் என்னதான் பார்ப்பார் என்று அவரது மனைவி வரம்மாவும் கணவரை கவனித்துள்ளார். விமானத்தில் போதையில் தொல்லை கொடுத்த நபர்கள்.. நான் பொது சொத்தா என பிரபல நடிகை ஆவேசம் அப்போது, தனது முதல் மனைவி இன்ஸ்டாவில் செய்த ரீல்ஸ் வீடியோவை ஆனந்த் பாபு ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் டென்ஷன் ஆன வரம்மா, ஆனந்த் பாபுவிடம் கேட்டுள்ளார். இதனால், ஆனந்த்பாபுவுக்கு வரம்மாவுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் வீட்டில் இருந்த பிளேடை எடுத்து ஆனந்த் பாபுவின் அந்தரங்க உறுப்பை வெட்டி விட்டாராம். இதனால் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறிய ஆனந்த பாபுவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்த் பாபுவின் மனைவியிடம் விசாரித்து வருகின்றனர். வரம்மா நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், ” எனது கணவரான ஆனந்த் பாபு முதல் மனைவியின் வீடியோவை இன்ஸ்டா ரீல்ஸ்சில் பார்த்ததால் நான் கோபம் அடைந்தேன். இது குறித்து அவரிடம் கேட்ட போது எனக்கும் அவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஆனால் வேண்டும் என்றே நான் பிளேடால் அவரை தாக்கவில்லை. விபத்தாக நடைபெற்று விட்டது” என்றார். முதல் மனைவியின் வீடியோவை பார்த்ததால் கோபம் அடைந்த இரண்டாவது மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
An incident happened in Andhra Pradesh where the second wife cut off her husband’s genitals with a blade after he drooled over the first wife’s Instagram video.
Story first published: Sunday, July 23, 2023, 14:33 [IST]

