
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
பென்னாகரத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் கோவிந்தராஜ் (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதுடைய பேச இயலாத மாற்றுத் திறன் கொண்ட சிறுமியை விவசாயியான கோவிந்தராஜ் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

