Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தாழம்பூர் | மனைவி, குழந்தையை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை முயற்சி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 18, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
தாழம்பூர் | மனைவி, குழந்தையை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை முயற்சி
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தாழம்பூர்: சென்னை அருகே மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு, ஐ.டி. ஊழியர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் அரவிந்த் (32). இவர் ஐ.டி. படிப்பு படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுஜிதா (32), மகள் ஐஸ்வர்யா (7). குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் தன்னுடைய வேலையை சுஜிதா ராஜீனாமா செய்துவிட்டார்.

இந்நிலையில் நாவலூரை அடுத்துள்ள தாழம்பூர் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வங்கிக் கடன் மூலம் வாங்கி மூவரும் அங்கே குடியேறினர். அரவிந்த் ஒருவரின் மாத ஊதியத்தில் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடன் பிரச்சினையில் தவித்த அரவிந்த் கடந்த இரண்டு மாதமாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை தாழம்பூர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் பேசிய அரவிந்த் தான் தன்னுடைய மனைவி சுஜிதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோரை கொலை செய்து விட்டதாகவும், தானும் தற்கொலை செய்ய மாத்திரை போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு, உதவி ஆய்வாளர்கள் கமல தியாகராஜன், கோபி ஆகியோர் அரவிந்த் கூறிய முகவரிக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டினுள் அரவிந்த் சேரில் அமர்ந்தபடி இருந்தார். படுக்கை அறையில் சுஜிதா, ஐஸ்வர்யாஇறந்த நிலையில் இருந்துள்ளனர்.

போலீஸார் விசாரணையில், தனக்கு ஏராளமான கடன் இருந்ததாகவும் அதனால் அதிக அளவில் தூக்க மாத்திரை உட்கொண்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டதாகவும் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதில் மனைவியும் குழந்தையும் உயிரிழந்த நிலையில் அரவிந்த் மட்டும் பிழைத்துள்ளார். உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் அவரைமீட்டு ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்டு கிடந்த சுஜிதா(32), ஐஸ்வர்யா (7) உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சுஜிதாவின் தந்தை பண்ருட்டி சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமரன் பார்வையிட்டனர்.

.

Tags: ஊழயரஐ.டகழநதயகனறதழமபரதறகலமயறசமனவ
Previous Post

விழிஞ்சம் துறைமுகம் டூ கண்ணூர் ஏர்போர்ட்! ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் உம்மன் சாண்டி!

Next Post

திருப்பதி ஏழுமலையானுக்கு இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம்.. பக்தர்கள் ஹேப்பி.. அக்டோபர் டிக்கெட் ரிலீஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி ஏழுமலையானுக்கு இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம்.. பக்தர்கள் ஹேப்பி.. அக்டோபர் டிக்கெட் ரிலீஸ்

திருப்பதி ஏழுமலையானுக்கு இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம்.. பக்தர்கள் ஹேப்பி.. அக்டோபர் டிக்கெட் ரிலீஸ்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    முட்டாள் பையன் அரவிந்த் முடிவு தவறானது இரண்டு கொலை தற்கொலை முயற்சி இரண்டுமே முட்டாள்தனமானது கடன் அதிகம் அப்படி வரும்போது அந்த வீட்டை விற்று செட்டில்மெண்ட் பண்ண வேண்டியதுதானே அல்லது வீட்டை கடன்காரர்கள் இடமே திருப்பி ஒப்படைக்கலாம் ஒப்படைக்கலாம் எவ்வளவோ வழிமுறைகள் இருக்கும்போது கொலை தற்கொலை முயற்சி இரண்டுமே தவறானது மொத்தத்துல குடும்பமே நாசமாயிடுச்சு

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In