Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

12 மணிவரை ஒத்திவைப்பு! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது! புயலை கிளப்பும் எதிர்க்கட்சிகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 20, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
12 மணிவரை ஒத்திவைப்பு! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது! புயலை கிளப்பும் எதிர்க்கட்சிகள்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு விஷயங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ள நிலையில் 12 மணி வரை இருசபைகளும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார்.

அதன்படி இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 17 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்தும் வகையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் 30க்கும் அதிகமான கட்சிகளை சேர்ந்த 44 தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை பற்றியும், விலை வாசி உயர்வு, ஆளுநர்களின் செயல்பாடு, மத்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தலைநகர் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்ட மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா என சுமார் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதாக்கள் 2 சபைகளிலும் நிறைவேற்றப்படும் நிலையில் சட்டமாக இயற்றப்பட உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. இது லிஸ்ட்லயே இல்லையே.. நாங்க ரெடி.. அதிரடியாக இறங்கி வந்த மத்திய அரசு! இதற்கிடையே தான் இன்றைய கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சனைகளை கூறி விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதாவது கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் மணிப்பூர் வன்முறை நடந்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அதுபற்றி எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளார். இதனால் இந்த விஷயத்தில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மேலும் திமுக சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் எனவும், டெல்லி ஆம்ஆத்மி சார்பில் டெல்லி சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைக்கவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொங்கின. மக்களவைக்கு சபாநாயகர் ஓம்பிர்லா தலைமை வகித்தார். மாநிலங்களைக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமை வகித்தார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல் கட்டமாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த இரு சபைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் போக்ஸோவில் கைது

Next Post

மணிப்பூரில் பெண்களை நிர்வணப்படுத்தி ஊர்வலம் – அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே தலையிடுவோம் – உச்சநீதிமன்றம் காட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணிப்பூரில் பெண்களை நிர்வணப்படுத்தி ஊர்வலம் – அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே தலையிடுவோம் – உச்சநீதிமன்றம் காட்டம்.

மணிப்பூரில் பெண்களை நிர்வணப்படுத்தி ஊர்வலம் - அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே தலையிடுவோம் - உச்சநீதிமன்றம் காட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In