Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தங்க மூக்குத்தியெல்லாம் வேண்டாம்! அன்னதானத்திற்கு தக்காளி கொடுங்க.. 51 கிலோ துலாபாரம் கொடுத்த பக்தர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தங்க மூக்குத்தியெல்லாம் வேண்டாம்! அன்னதானத்திற்கு தக்காளி கொடுங்க.. 51 கிலோ துலாபாரம் கொடுத்த பக்தர்
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 51 கிலோ தக்காளியை துலாபாரமாக தம்பதி ஒருவர் காணிக்கையாக கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திரா மாநிலம் அனக்காபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்கா அப்பா ராவ், இவரது மனைவி மோகினி. இவர்களுக்கு பாவிஷ்யா என்ற மகள் உள்ளனர்.

தம்பதி இருவரும் சில மாதங்களுக்கு முன்பு அம்மனிடம் வேண்டிக் கொண்டனர். வேண்டுதல் நிறைவேறினால் தங்க மூக்குத்தி காணிக்கையாக அளிப்பதாக வேண்டினர். அந்த வேண்டுதல் நிறைவேறிய நிலையில் தங்க மூக்குத்தியை காணிக்கையாக கொடுக்க முன்வந்தனர்.

அதன்படி நுகலம்மா கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அங்கு கோயில் நிர்வாகத்திடம் தங்க மூக்குத்தி காணிக்கை குறித்து தம்பதி தெரிவித்தனர். அதற்கு நிர்வாகம் சார்பில் அன்னபிரசாதம் தயாரிக்க தக்காளி தேவைப்படுகிறது. ஆனால் தக்காளியை யாரும் தானமாக தரவில்லை. எனவே நீங்கள் மூக்குத்திக்கு பதிலாக தக்காளியை காணிக்கையாக தரலாம் என கூறியுள்ளனர்.

அதன்படி தம்பதியினர் தங்கள் மகளின் எடைக்கு எடை தக்காளியை துலாபாரம் வைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று கோயில் துலாபாரத்தில் தங்கள் மகளை அமர வைத்து எடைக்கு எடை தக்காளியை அவர்கள் தானமாக கொடுத்தனர். அந்த தக்காளி உடனடியாக அன்னபிரசாதத்தில் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டது.

அதாவது அந்த சிறுமியின் எடை 51 கிலோ இருந்தது. அதன்படி 51 கிலோ எடை கொண்ட தக்காளி பழம் காணிக்கையாக கொடுக்கப்பட்டது. பொதுவாக கோயில்களில் வெல்லம், சர்க்கரை, நாணயம் உள்ளிட்டவற்றை எடைக்கு எடை தானமாக கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்.

ஆனால தக்காளியை துலாபாரத்தில் வைத்து தானாக கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மைக்காலமாக வரத்து குறைவாக இருப்பதால் தக்காளியின் விலை இந்தியா முழுவதும் அதிகமாகவே விற்கப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

மாகாண சபை தேர்தலை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர்கள் கோரிக்கை

Next Post

பழனிசாமிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: அதிகாரிகளின் செயல் வேதனைக்குரியது என நீதிபதி தீர்ப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பழனிசாமிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: அதிகாரிகளின் செயல் வேதனைக்குரியது என நீதிபதி தீர்ப்பு

பழனிசாமிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: அதிகாரிகளின் செயல் வேதனைக்குரியது என நீதிபதி தீர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In