Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கோவை அருகே பள்ளி வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கோவை அருகே பள்ளி வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை: கோவை அருகே பள்ளி வளாகத்தில் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்தார்.

சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.50 ஆயிரம், மாவட்ட திமுக சார்பில் ரூ.1 லட்சம், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் என ரூ.2.50 லட்சத்துக்கான காசோலைகளை பெற்றோரிடம் வழங்கினார். கோவை வேடப்பட்டி சாலை நாகராஜபுரத்தில் உள்ள அன்னை சத்தியா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். கூலித் தொழிலாளி. இவரது மகன் குகன் ராஜ் (6) தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை விளையாடச் செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்ற குகன்ராஜ், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் பெற்றோர் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. நேற்றிரவு வீட்டின் அருகே அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் தேடியபோது, நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் மிதந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

சிறுவனை மீட்டு, வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் தூக்கிச் சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள், தொட்டியை முறையாக மூடாததால்தான் சிறுவன் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்ததாகக் கூறி சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் அங்கு சென்று தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தொண்டா முத்தூர் காவல் துறையினர் அங்கு வந்து விசாரித்தனர். சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தினர். சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அசாம் மாநில தொழிலாளர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சிறுவனின் பெற்றோரை நேற்று வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.50 ஆயிரம், மாவட்ட திமுக சார்பில் ரூ.1 லட்சம், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் என ரூ.2.50 லட்சத்துக்கான காசோலைகளை பெற்றோரிடம் அமைச்சர் வழங்கினார்.

.

Tags: அரகஉயரழபபகவசறவனதடடயலதணணரபளளமழகவயதவளகததல
Previous Post

கர்நாடக அரசை கண்டித்து அரியலூரில் அக்.10-ம் தேதி தமாகா ஆர்ப்பாட்டம்

Next Post

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்கள்: இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்கள்: இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்கள்: இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு 2 1/2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருப்பது ஆறுதலானது ஆனால் அது தீர்வு ஆகாது பள்ளி காம்பவுண்டில் நடந்த இந்த மரணத்திற்கு முழு பொறுப்பு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகும் பள்ளியின் பாதுகாப்பில் கவன குறைவாக இருந்து மரணத்திற்கு காரணமாக இருந்த தலைமையாசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In