
சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை, ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (29). இவர் கடந்த 5-ம் தேதி இரவு தனது நண்பரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர், நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பி செல்ல நள்ளிரவு 1 மணியளவில் தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பிரவீன்குமாரை வழிமறித்து நின்றனர். தொடர்ந்து அவர்கள் பிரவீன்குமாரை மிரட்டியும், கைகளால் தாக்கியும் தகராறில் ஈடுபட்டனர்.
