Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home ஹாட்ஸ்டார்

தேவகோட்டை அருகே மயானத்தில் பொங்கல் வைத்து கிடாவெட்டி வழிபட்ட கிராம மக்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 6, 2023
in ஹாட்ஸ்டார்
0
தேவகோட்டை அருகே மயானத்தில் பொங்கல் வைத்து கிடாவெட்டி வழிபட்ட கிராம மக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மயானத்தில் பொங்கல் வைத்து, கிடாவெட்டி கிராம மக்கள் வழிபட்டனர்.

தேவகோட்டை அருகே இறகுசேரி கிராமத்தில் சுடலைமாடன், மஞ்சன பேச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 61 தெய்வங்கள் உள்ளன. இக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்திரை மாத கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்தாண்டு மே 2-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். பெண்கள் வீட்டில் முளைப்பாரி வளர்த்து வந்தனர். செவ்வாய்க்கிழமை பெண்கள், குழந்தைகள் முளைப்பாரி எடுத்து கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து இரவு அருகேயுள்ள மயானத்துக்கு மேளதாளத்துடன் சாமியாடிகளுடன் கிராம மக்கள் சென்றனர். நள்ளிரவு 12 மணிக்கு மயானத்தில் மண் பானையில் பெண்கள் பொங்கல் வைத்தும், ஆண்கள் கிடா வெட்டியும் வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு வந்து, 30 கிடாக்களை வெட்டி 61 சுவாமிகள், 70 சேனைகளுக்கு படையலிட்டனர். வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்த விநோத திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். புதன்கிழமை காலை முளைப்பாரியை கோயில் அருகேயுள்ள குளத்தில் கரைத்தனர். பல தலைமுறைகளாக நள்ளிரவில் மயானத்தில் பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபாடு நடத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

.

Tags: அரககடவடடகரமதவகடடபஙகலமககளமயனததலவததவழபடட
Previous Post

பூரா வன்மம்.. முதல்வரின் அரசுமுறை பயணத்தை சிறுமைப்படுத்துகிறார் ஆளுநர்.. பொங்கி எழுந்த முத்தரசன்!

Next Post

கடலூர் சூறைக்காற்றில் 2,370 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதம்: ஆய்வு செய்த அமைச்சர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடலூர் சூறைக்காற்றில் 2,370 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதம்: ஆய்வு செய்த அமைச்சர்

கடலூர் சூறைக்காற்றில் 2,370 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதம்: ஆய்வு செய்த அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In