சென்னையைக் குளிர்வித்த திடீர் மழை… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள், இன்று காலை முதலே `கும் இருட்டு’ சூழ்ந்து காணப்படுகின்றன. திடீரென அடித்த பலத்தக் காற்றாலும், லேசான தூரல்களாலும் மாநகர் வெப்பம் தணிந்து ஊட்டி, கொடைக்கானல்போல ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில், `தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது’ என்ற சில் அப்டேட்டைக் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

