Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர்! எகிறி அடித்த எ.வ.வேலு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2023
in அரசியல் செய்திகள்
0
பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர்! எகிறி அடித்த எ.வ.வேலு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Thanjavur oi-Arsath Kan
Published: Sunday, June 18, 2023, 9:41 [IST]
தஞ்சாவூர்: பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர் என அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு விமர்சனத்தை முன் வைத்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து யாரும் வேலை தேடி பீகாருக்கு செல்வதில்லை என்றும் பீகாரிலிருந்து தான் பலரும் இங்கு வேலை தேடி வருகிறார்கள் எனவும் கூறியுள்ளார். கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஆளுநர் ரவி மீதான தனது கோபத்தை கொட்டித்தீர்த்தார். அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ரவி கெடுபிடி காட்டி வரும் நிலையில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர் என அமைச்சர் வேலு விமர்சித்துள்ளார். மேலும், மாநில சுயாட்சிக்கு ஆபத்து வந்துள்ளதாகவும் அதனை திமுக அரசு எதிர்கொண்டு வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார். கடந்த இரண்டாண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, இன்னும் என்னென்ன திட்டங்களை வரும் நாட்களில் அரசு செய்யவுள்ளது என்பது குறித்தும் பேசினார். ஆளுநருக்கு எதிராக அமைச்சர்கள் பொதுக்கூட்டங்களில் பேசத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தையும், அருங்காட்சியகத்தையும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நாளை திறந்து வைக்கவிருக்கிறார். பீகார் முதல்வர் தமிழகம் வரும் நிலையில், அதுவும் குறிப்பாக கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க வரும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து யாரும் வேலை தேடி பீகாருக்கு செல்வதில்லை என்றும் பீகாரிலிருந்து தான் பலரும் இங்கு வேலை தேடி வருகிறார்கள் எனவும் அமைச்சர் வேலு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Minister Ev Velu said that no one from Tamil Nadu goes to Bihar in search of work and many people come here from Bihar to look for work.
Story first published: Sunday, June 18, 2023, 9:41 [IST]

.

Previous Post

Tamil News Today Live : சென்னையைக் குளிர்வித்த திடீர் மழை… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்! | Latest Tamil News Today Live Updates Dated On 18 06 2023

Next Post

கல்விக் கடன் வசூலில் வங்கிகள் கெடுபிடியால் மாணவர்கள், பெற்றோர் மன உளைச்சல் – திமுக வாக்குறுதிப்படி அரசே ஏற்குமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கல்விக் கடன் வசூலில் வங்கிகள் கெடுபிடியால் மாணவர்கள், பெற்றோர் மன உளைச்சல் - திமுக வாக்குறுதிப்படி அரசே ஏற்குமா?

கல்விக் கடன் வசூலில் வங்கிகள் கெடுபிடியால் மாணவர்கள், பெற்றோர் மன உளைச்சல் - திமுக வாக்குறுதிப்படி அரசே ஏற்குமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In