Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி துணிகரம்: குற்றாலம் அருவியில் குளித்தபோது 6 பெண்களிடம் நகை திருட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கூட்ட நெரிசலை பயன்படுத்தி துணிகரம்: குற்றாலம் அருவியில் குளித்தபோது 6 பெண்களிடம் நகை திருட்டு
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளித்த 6 பெண்களிடம் நேற்று நகைகள் திருடப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றாலத்தில் சாரல் சீசன் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. விடுமுறை தினமான நேற்று கூட்டம் அலைமோதியது. ஆனால் அருவிகளில் தண்ணீர் குறைவாகவே விழுந்தது.

கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தபோது சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்றும், மிதமான அளவில் இருந்தபோது மொத்தமாகவும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பிரதான அருவியில் குளித்த பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகள் திருடப்பட்டுள்ளன.

120 கிராம் நகை திருட்டு: பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வளர்மதி (58), சரோஜா (70), வனஜோதி (60), சென்னையை சேர்ந்த பரமேஸ்வரி (58), திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த அய்யம்மாள் (31) உட்பட 6 பெண்களிடம் நேற்று சுமார் 120 கிராம் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் தொடர் எச்சரிக்கை: குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமும், குறிப்பாக அருவியில் குளிக்கச் செல்லும் பெண்களிடமும் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி உள்ளூர் போலீஸார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அப்படியிருந்தும் நேற்று ஒரே நாளில் சுற்றுலா வந்த 6 பெண்களிடம் நகைகள் திருடப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

.

Tags: அரவயலகடடகளததபதகறறலமதணகரமதரடடநகநரசலபணகளடமபயனபடதத
Previous Post

எதிர்க்கட்சிகள் பெங்களூர் கூட்டம்.. பெங்களூரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்- உற்சாக வரவேற்பு.

Next Post

“காசு இல்லைங்க..” வேறு வழியில்லாமல் விமான நிலையங்களை வாடைக்கு விடும் பாகிஸ்தான்! கஷ்டம்தான்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“காசு இல்லைங்க..” வேறு வழியில்லாமல் விமான நிலையங்களை வாடைக்கு விடும் பாகிஸ்தான்! கஷ்டம்தான்

"காசு இல்லைங்க.." வேறு வழியில்லாமல் விமான நிலையங்களை வாடைக்கு விடும் பாகிஸ்தான்! கஷ்டம்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In