மும்பையில் உள்ள மிகவும் பரபரப்பான பாந்த்ரா மேம்பாலத்தில், ஒரு அடையாளம் தெரியாத நபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் காட்டும் ஒரு அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை நகரம் எப்போது வேகமாக மற்றும் பரபரப்பாக இயங்கும் நகரங்களில் ஒன்று, இந்நிலையில் அங்கு மிகவும் பிரபலமான பாந்த்ரா மேம்பாலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மேம்பாலத்தில் ஒரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அந்த நபர் தனது கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்விட்டர் தளத்தில் வெளியான சில வீடியோகளில் அந்த நபர் பாந்த்ரா மேம்பாலத்தில் தூக்கில் தொங்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல ட்விட்டர் தளத்தில் வெளியான மற்றொரு வீடியோவில், போலீசார் இறந்த நபரின் உடலை அகற்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

