ஆனால் நேற்று காலையில் சாஸ்திர சடங்குகள் முடிந்து தாலி கட்டும் இறுதி வினாடியில் திடீரென எழுந்து நின்ற திவ்யா, ‘எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை நான் வேறு ஒரு இளைஞரை காதலிக்கிறேன்’ என்று கூறினார். இதை கேட்டு இரண்டு குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக மண்டபத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இறுதி வினாடியில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால், வெங்கடேஷ் குடும்பத்தினர் கோளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீஸார் இரண்டு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் திவ்யாவின் மனம் மாறாததால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது. கடைசி நிமிடத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

