Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கும்பகோணத்தில் பெண் செவிலியர் தற்கொலை; உயிரிழப்பில் சந்தேகம் என உறவினர்கள் மறியல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 30, 2023 - Updated on August 31, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கும்பகோணத்தில் பெண் செவிலியர் தற்கொலை; உயிரிழப்பில் சந்தேகம் என உறவினர்கள் மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கும்பகோணம்: கும்பகோணத்தில் பெண் செவிலியர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் வட்டம் திருமாந்துறை தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜன் மகள் வைஷ்ணவி (22). கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக செவிலியராக பணியாற்றி வந்தார். மருத்துவமனையின் மாடியில் தங்கியிருந்த இவர், உடனிருந்த மற்றொரு பெண் விடுப்பில் சென்று விட்டதால், தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவுப் பணியை முடித்துவிட்டு, நேற்று காலை அறைக்கு திரும்பிய வைஷ்ணவி, பின்னர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வைஷ்ணவி தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸார் அங்கு சென்று, வைஷ்ணவியின் சடலத்தை கைப் பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வைஷ்ணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி, அவரது உறவினர்கள் விசிக மாநகர் மாவட்டச் செயலாளர் ச.கோ.ராஜ் குமார் தலைமையில் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கும்பகோணம் கிழக்கு போலீஸார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

.

Tags: உயரழபபலஉறவனரகளஎனகமபகணததலசநதகமசவலயரதறகலபணமறயல
Previous Post

அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Next Post

மகளிர் உரிமைத் தொகைக்காக ஆதார் இணைப்புடன் வங்கிக் கணக்கு: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகளிர் உரிமைத் தொகைக்காக ஆதார் இணைப்புடன் வங்கிக் கணக்கு: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

மகளிர் உரிமைத் தொகைக்காக ஆதார் இணைப்புடன் வங்கிக் கணக்கு: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In