
திருப்பூர்: வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் அடுத்த ஈட்டி வீரம்பாளையம் ராக்கியாப்பட்டி சுடுகாடு பகுதியில் பெண்ணின் சடலம் கிடந்தது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பெருமா நல்லூர் போலீஸார் அங்கு வந்து, சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

