இந்நிலையில் பங்கஜா முண்டே காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து பங்கஜா முண்டே இன்று அளித்துள்ள பேட்டியில், “தேர்தல் தோல்விக்கு பிறகு நான் கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை. அதனை நான் நிரூபிக்கவேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு வேறு கட்சிகள் முக்கிய பதவி கொடுக்க தயாராக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
அதனை நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனது அரசியல் வாழ்க்கையை ஒழிக்க முயற்சி நடக்கிறது. நான் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறுவதாக வரும் தகவலில் உண்மை இல்லை.
முதுகில் குத்தும் ரத்தம் எனது உடம்பில் ஓடவில்லை. கட்சி என்னை மதிக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவு இறுதியானது. நான் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்ததாக வரும் தகவலில் எந்த வித உண்மையும் இல்லை. எனக்கு காந்தி குடும்பத்தை பற்றி தனிப்பட்ட முறையில் தெரியாது. மீடியாக்கள் இது தொடர்பாக தவறான செய்தியை வெளியிடுகின்றன.
எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த இது போன்று செய்தி வெளியிடுகின்றனர். அடுத்த இரண்டு மாதத்திற்கு அரசியலில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன். இதில் என்னை நானே சுய பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

