
மதுரை: தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் வழக்கஞர் சகோதரிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் சகோதரி ஆ.நந்தினி, ஆ.நிரஞ்சனா. ஏற்கெனவே மதுவிலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை உட்பட வெளியூர்களில் நந்தினி, அவரது தந்தையும் அடிக்கடி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.

