Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காவல் துறை வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு: திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
காவல் துறை வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு: திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பூர்: திருப்பூரில் காவல் துறை வாகனம் மோதி 8 வயது சிறுமி உயிரிழந்தார். இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் திவ்யதர்ஷினி (8). விஜயபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்ததும், திவ்யதர்ஷினியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, காங்கயம் சாலையில் ராஜேஸ்வரி வந்து கொண்டிருந்தார்.

நல்லிக்கவுண்டர் நகர் அருகே வந்தபோது, அவர்கள் பின்னால் வந்த நல்லூர் காவல் நிலைய வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த வாகனத்தை ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரசின்ன கண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்தார். இந்த விபத்தில் திவ்யதர்ஷினி உயிரிழந்தார். ராஜேஸ்வரி காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்த நல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சிறுமியின் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வாகனத்தை ஓட்டி வந்த வீர சின்ன கண்ணன் போதையில் இருந்ததாகக் கூறி போலீஸாரிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, உதவி ஆணையர் நந்தினி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வீரசின்னகண்ணனை பிடித்து, நல்லூர் போலீஸார் விசாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது,“சாலையின் மையத்தடுப்பை ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது, காவல்துறை வாகனம் மோதியது. இதில், காவல்துறை வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி உயிரிழந்தார். காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்தவர், மது போதையில் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது’’ என்றனர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

.

Tags: உயரழபபகவலசலசறமதரபபரலதறபதமககளமதமறயலவகனம
Previous Post

செந்தில் பாலாஜிக்கு அடுத்த இழப்பு.. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி முத்துசாமிக்கு!

Next Post

RN Ravi Vs DMK: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்-governors house clarification on not taking action on aiadmk ex ministers corruption complaints

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
RN Ravi Vs DMK: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்-governors house clarification on not taking action on aiadmk ex ministers corruption complaints

RN Ravi Vs DMK: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்-governors house clarification on not taking action on aiadmk ex ministers corruption complaints

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In