
மேட்டூர்: அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டு 7 பாலியல் வன்கொடுமை நடந்தது. திமுக ஆட்சியில் 2021, 2022ம் ஆண்டில் 58 பாலியல் வன் கொடுமைகள் அரங்கேறியுள்ளன என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்
சேலம் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றியம் இருப்பாளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, பாமக, தேமுததிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 1500 க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

