
சென்னை: சென்னை, அயனாவரம், பங்காரு தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (30). இவர்,நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் வீட்டில் இருந்தபோது, ஆட்டோவில் வந்த5 பேர் மாரீஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து,மாரீஸ்வரனை கத்தியைக் காட்டி மிரட்டினர். பின்னர் அவரையும், அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கினர். மேலும், அவர்களிடமிருந்த பணம் மற்றும் 7 செல்போன்களை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம்போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதோடு பணப்பறிப்பில் ஈடுபட்டது பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த விஜய் பிரபு (26) என்பது தெரியவந்தது.

