காவல்துறையினருக்கு, வருவாய்த்துறையினருக்கு, உள்ளாட்சித் துறையினருக்கு, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இப்படியே சென்றால் சாதாரண மக்களுக்கு எப்படி இவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியும்?
தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 1,989 படுகொலைகள் நடந்திருக்கின்றன. கடந்தாண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 3,511 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
நேர்மையாகப் பணியாற்றியதற்காக எடப்பாடியார் ஆட்சியில் விருது பெற்ற விருதுநகர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரி துரை பிரிதிவிராஜ், தி.மு.க ஆட்சியில் நேர்மையாகப் பணி செய்ய முடியவில்லை என்று ராஜினாமா செய்திருக்கிறார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அரசு ஊழியர்களை ஏமாற்றியிருக்கிறீர்கள். தற்போது அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறீர்கள். அவர்கள் எங்கே போய் முறையிட முடியும்… இந்த இரண்டாண்டுக்கால ஆட்சியில் தி.மு.க அரசுமீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்” என்று கூறினார்.

