
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு வாழ்நாள் சிறை விதித்து, தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருதாநல்லூர் காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ராஜேந்திரன்(45). இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் 4-ம் தேதி ராஜேந்திரன் மீது சிறுமி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றார் எனவும் ராநாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

