Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பூரில் கடை உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 1, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திருப்பூரில் கடை உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பூர்: திருப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே காமாட்சி அம்மன் கோயில் வீதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹஜ்மத் சிங் (40) என்பவர் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 29-ம் தேதி மாலை வந்த கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 16 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியது.

ஹஜ்மத் சிங் அளித்த புகாரின் பேரில் தெற்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலரின் கணவர் சக்திவேல் (30), அழகர் (35) ஆகியோரை சில மணி நேரங்களில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணைக்குப் பின், இவ்வழக்கில் தொடர்புடைய வாசு (30), ஜெய பாண்டியன் (31), முத்து ராமலிங்கம் (40), சிவ மணி (20) ஆகியோரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், கார், கத்திகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கொள்ளையடித்த பணத்தை கோவா-வுக்கு கொண்டு சென்று பங்கிட்டுக்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்ததும், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர் இரவோடு இரவாக 4 பேரும் உதகைக்கு சென்று மது விருந்து நடத்தி செலவழித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர் பிருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதால், விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

.

Tags: உரமயளரடமகடகதகளளதரபபரலபரமலமர.16லடசமவழககல
Previous Post

மணிப்பூர் மக்களுக்கு ரூ.10 கோடிக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்ப தயார்: பிரேன் சிங்குக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Next Post

ஓபிஎஸ், தினகரன் கூட்டாக ஆர்ப்பாட்டம்: கோடநாடு வழக்கு விசாரணையில் ‘ஆமை வேகம்’ என சாடல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓபிஎஸ், தினகரன் கூட்டாக ஆர்ப்பாட்டம்: கோடநாடு வழக்கு விசாரணையில் ‘ஆமை வேகம்’ என சாடல்

ஓபிஎஸ், தினகரன் கூட்டாக ஆர்ப்பாட்டம்: கோடநாடு வழக்கு விசாரணையில் ‘ஆமை வேகம்’ என சாடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In