
கடலூர்: வடலூர் அருகே தனியார் பேருந்து ஒன்று, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
கடலூரில் இருந்து விருத்தாசலத்துக்கு நேற்று மதியம் தனியார் பேருந்து ஒன்று சுமார் 50 பயணிகளுடன் சென்றது. வடலூர் அருகே ராசாகுப்பம் கிராம பகுதியில் அதிவேகமாக சென்றபோது பேருந்தின் டயர் பஞ்சரானது. இதனால் நிலைதடுமாறிய பேருந்து, எதிரே வந்த கார் மீது மோதி, சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி நின்றது.

