“வளர்ந்த நாடுகளை எட்டிப்பிடிக்க 8 மணி நேர வேலை சரியாக இருக்காது. இருக்கிற ஒரு வாழ்க்கையில் நாம் அடிக்கிற அடி சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாடக்குளம் அருகே தன் நண்பரும், பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகியுமான விஷ்ணுபிரசாத், அவர் மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் தொடங்கியிருக்கும் ஐ.டி நிறுவனத்துக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை தந்தார்.
பிறகு ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கிவிட்டுப் பேசிய அண்ணாமலை, “ஒவ்வோர் ஆண்டும் 7 சதவித வளர்ச்சி அடையும் நாடு இந்தியா. 142 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா, உலகின் மிகப்பெரிய மூன்றாவது பொருளாதார நாடு.

