Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

யூனிடெக்கின் ரூ.125 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பரிவர்த்தனையில் அமலாக்கத் துறை நடவடிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
யூனிடெக்கின் ரூ.125 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பரிவர்த்தனையில் அமலாக்கத் துறை நடவடிக்கை
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் யூனிடெக் நிறுவனத்தின் ரூ.125.06 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக் குழுமம், அதன் விளம்பரதாரர்கள், நிர்வாகிகள் அந்நிறுவனத்தில் வீடுகள் வாங்கியவர்களிடம் பண மோசடி செய்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கெனவே, யூனிடெக் குழுமம் மற்றும் அதன் தொடர்புடைய ஷிவாலிக் குழுமம், கார்னோஸ்டிக் குழுமம், திரிகார் குழுமம், ஷெல் நிறுவனங்கள், பினாமி நிறுவனங்கள் அதன் தொடர்புடைய இடங்கள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாகிகள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா, ரமேஷ் சந்திரா, ப்ரீத்தி சந்திரா, ராஜேஷ் மாலிக் ஆகிய 5 பேரை அமலாக்கத் துறை கைது செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில், மொத்தமாக யூனிடெக் நிறுவனம் ரூ.7,612 கோடி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், இதுவரை அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1,257.61 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இந்நிலையில், சென்னை நல்லம்பாக்கத்தில் யுனிடெக் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.125.06 கோடி மதிப்பிலான நிலத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முடக்கினர். இவ்வழக்கின் விசாரணை நடந்து வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

.

Tags: அமலககதகடசடடவரதசதததறநடவடககபரவரததனயலமடககமயனடககனர.125
Previous Post

“அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது” – ஜவாஹிருல்லா கருத்து

Next Post

தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம்: போலீஸாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம்: போலீஸாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம்: போலீஸாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In