Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கொடகரை மலைக் கிராமத்தில் வலுவிழந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வாழும் பழங்குடி மக்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கொடகரை மலைக் கிராமத்தில் வலுவிழந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வாழும் பழங்குடி மக்கள்
33
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கொடகரை மலைக் கிராமத்தில் வலுவிழந்த தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு, புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை அருகே தொட்டமஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமம் கொடகரை. அடந்த வனப்பகுதிக்கு நடுவில் உள்ள இக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் 150 பேர் வசித்து வருகின்றனர். பேருந்து வசதியில்லை: இவர்கள் வனத்தில் தேன் எடுத்தல், விறகுகளைச் சேகரித்தல், பழங்களைப் பறித்து விற்பனை செய்வது, கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். இம்மலைக் கிராமத்துக்குச் செல்லும் மண் சாலை கடந்த 2014-ம் ஆண்டு தார் சாலையாக மாற்றப்பட்டது.ஆனால், பேருந்து இயக்கம் இல்லாததால் வனத்துறை மூலம் வேன் இயக்கப்படுகிறது. மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பழங்குடியின மக்கள் 113 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. தற்போது, அந்த வீடுகளின் மேற்கூரைகளில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதோடு, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

காக்கும் பிளாஸ்டிக் கவர்: இதனால், மழைக் காலங்களில் வீடுகளில் மழைநீர் உள்ளே புகுவதைத் தடுக்க வீட்டின் மேற்கூரையை பிளாஸ்டிக் கவர் மூலம் கட்டி பாதுகாத்து வருகின்றனர். மேலும், இங்கு போதிய குடிநீர், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதி இல்லாததால், பல்வேறு சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி பழங்குடியின மக்கள் கூறியதாவது: மலையில் கிடைக்கும் தேன், பழங்கள் மற்றும் விறகுகளைச் சேகரித்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் தேன்கனிக்கோட்டைக்கு நடந்து சென்று விற்பனை செய்கிறோம். அரசு வழங்கிய தொகுப்பு வீடுகள் வலுவிழந்து சுவர்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. மிக மோசமான நிலையில் உள்ள வீடுகளில் வசிப்போர் வீட்டை காலி செய்து வீட்டின் அருகே குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

கொடகரை மலைக் கிராமத்தில் உள்ள தொகுப்பு வீட்டில் இடிந்த

நிலையில் உள்ள கழிப்பறைக் கட்டிடம்.

வேலையும் இல்லை: சிலர் வீட்டின் மேற்கூரைக்கு மரக்கட்டைகள் மூலம் முட்டுக்கொடுத்துள்ளனர். இங்கு வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு வீட்டுக்கு 10 குடம் தண்ணீர் மட்டும் கிடைக்கும். எங்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பணிகள் வழங்கவில்லை. மருத்துவமனை இல்லாததால், 10 நாட்களுக்கு ஒருமுறை அஞ்செட்டியிலிருந்து செவிலியர்கள் வந்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். கர்ப்பிணிகள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை 33 கிமீ தூரத்தில் உள்ள தேன்கனிக்கோட்டைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலையுள்ளது.

எனவே, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவும், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

.

Tags: அசசததடனகடகரகரமததலதகபபபழஙகடமககளமலகவடகளலவலவழநதவழம
Previous Post

ஒன்றிய பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Next Post

350 கோடி உணவு பொருட்கள் கொள்முதல் ஊழல் : அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
350 கோடி உணவு பொருட்கள் கொள்முதல் ஊழல் : அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு..

350 கோடி உணவு பொருட்கள் கொள்முதல் ஊழல் : அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இந்த மக்களின் அவல நிலையை போக்க மாவட்ட ஆட்சியர் முன் வர வேண்டும் இப்பகுதி மக்களும் ஒரு வழக்கறிஞரின் மூலமாகவோ அல்லது ஒரு பத்திரிகை துறையின் நண்பர் மூலமோ மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு கொடுத்து நிவாரணம் பெற நிறைய வழிமுறைகள் உள்ளன இப்பகுதிவால் மக்களே தங்களின் நிலையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும் உங்களுடைய சூழ்நிலையும் அவல நிலையும் அவருக்கு தெரியாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In