
தருமபுரி: தருமபுரி அருகே தொழில் பங்கு தாரர்கள் ஏமாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தாயும், மகனும் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பழைய குவாட்ரஸ் கோவிந்தசாமி கவுண்டர் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பழனிவேல் (72). இவரது மனைவி சாந்தி (56). இவர்களது மகன் விஜய் ஆனந்த் (35). இவர், பொறியியல் பட்டம் முடித்து விட்டு போட்டித் தேர்வுகள் மூலம் அரசுப் பணிக்கு முயன்றுள்ளார். பின்னர், நண்பர்கள் சிலருடன் இணைந்து ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் நூல் மில் ஒன்றை குத்தகைக்கு பெற்று இயக்கி வந்துள்ளார்.

