சுமார் 11 புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் 2022 லிருந்து தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது வெளிவந்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின்( NMC ) இளங்கலை மருத்துவக் குழுவின் புதிய விதிமுறைகள், புதிய மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ப்பது அல்லது ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தமிழ்நாட்டிற்கு கடினமாக இருக்கும்.
இந்த விதிமுறைகள் மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கையை 150 ஆகவும், ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு 10 லட்சம் மக்களுக்கும் 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற விகிதத்தை நிர்ணயித்துள்ளது.
இந்த முடிவானது வளங்கள் நியாயமான முறையில் செலவழிக்கப்படுவதை உறுதி செய்வதையும், நாடு முழுவதும் மருத்துவர்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், டாக்டர்கள் மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சை வசதிகளை சமமாக வழங்குவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி நிறுவ வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வாதிடுகின்றனர்.
NMC வழங்கிய காரணங்கள்
- நாடு முழுவதும் ஒரே மாதிரியான டாக்டர்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரைக்கப்பட்ட விகிதம் ஆயிரம் பேருக்கு 1 மருத்துவர். ஆனால் TN ஏற்கனவே 600 மக்கள்தொகைக்கு 1 மருத்துவர் உள்ளார்.
- மருத்துவக் கல்லூரிகள் 100 MBBS இடங்களின் விகிதத்தைப் பின்பற்ற வேண்டும். 8 கோடிக்கும் சற்று அதிகமான மக்கள்தொகை கொண்ட தமிழகம் 10,000 மருத்துவ இடங்களைக் கொண்டுள்ளது (70 மருத்துவக் கல்லூரிகளில்), எனவே அதிக மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.


மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அதாவது கவுன்சிலக்கு தமிழகத்தை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது அந்த அளவு தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ந்து இருக்கிறது என்பது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்