தலைமைச் செயலர் அரசு விழாவுக்குச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து… தனது ஆதரவாளர்களுடன் சுற்றுச்சூழல் விழா நடந்த கம்பன் கலையரங்கத்துக்கு வந்தார்.
சுயேச்சை எம்.எல்.ஏ வரும் தகவலை அறிந்த போலீஸார், கம்பன் கலையரங்கின் இரு வாயிற் கதவுகளையும் மூடியிருக்கின்றனர். எம்.எல்.ஏ நேரு அங்கு வந்து கதவை திறக்கக் கூறினார். ஆனால் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ நேரு, வாயிற் கதவின்மீது ஏறி உள்ளே குதித்தார். அவரது ஆதரவாளர்களும் அவரைப் பின்பற்றி உள்ளே வந்தனர்.

