அரசுத் துறைகளிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பொதுத் துறைகளிலும் காலியாக உள்ள இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல், வெளிமுகமை மூலம் ஆட்களை நியமிப்பது, ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிப்பது, ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்துவது போன்ற தொழிலாளர் விரோத, இளைஞர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத்தான் தி.மு.க. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வருகிறது.

