கடலூர் மாநகராட்சி முக்கிய பகுதியாக விளங்கும் திருப்பாதிரிப்புலியூர் நத்தவேலி ரோட்டின் சரவணா நகர் இணைப்பு பாதையில் அமைந்துள்ளது. சௌடாம்பிகை நகர் சித்தரா நகர் பௌனாம்பாள் நகர் போன்ற நகரங்களை உள்ளடக்கியது. இந்த இணைப்பு பாதையில் சில நகர பேருந்துகள் செல்கிறது. இருப்பினும் நகர வாசிகளுக்கு எந்த பயனும் இல்லை. கடலூர் மாவட்டம் கடலூர் மாநகராட்சி அந்தஸ்து பெற்றும் அடிப்படை தேவைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என்று அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.

முக்கிய குறிப்பு:
மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குப்பை சேகரிப்பு தொட்டிகள் இல்லை.
பாதாள சாக்கடை கட்டமைப்பு சரியில்லை.
குடி நீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.
கொள்ளீடம் கூட்டு குடிநீர் திட்டம் என்று சொல்லி விட்டு நன்னீர் திட்டம் கழிவுநீர் திட்டமாக மாறி விட்டது,
ஆனால் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு காற்றில் பறக்கிறது

மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
வேக தடைகள் அமைக்க வேண்டும்,
பேரிகாட் அமைக்க வேண்டும்,
சுகாதார குடிநீர் வசதி வேண்டும், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது


