மாநில மற்றும் தேசிய அளவிலான மிதிவண்டிப் போட்டிகளில் சாதித்து வரும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தங்கை ஷா.தபித்தா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருவதால் தனது பயிற்சிக்காக பிரத்யேக மிதிவண்டி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். அவரது பயிற்சிக்கு துணை நிற்கும் விதமாக விளையாட்டு துறை சார்பில் ரூ.13.99 லட்சம் மதிப்பிலான அதிநவீன சைக்கிள் மற்றும் உபகரணங்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

