இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ், அவருடைய கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனைகளும், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனைகளும், பிரிவு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. அதேபோல மற்றொரு பிரிவு என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை விடுதலை செய்தது.

