
சென்னை: இந்திய குற்றவியல் சட்டம், இந்தியன் சாட்சிகள் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டங்களின் பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் (எம்பிஏ) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மூன்று முக்கியமான குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இது தொடர்பான, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா 2023, பாரதிய நயாயா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்‌ஷியா 2023 ஆகிய மூன்று மசோதாகள் கடந்த ஆக.11-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இம்மசோதாக்கள் முறையே இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) 1973 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1987 ஆகியவைகளுக்கு மாற்றாக இருக்கும்.

