தற்போது தெலுங்கில் ‘Bhola Shankar‘, தமிழில் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே, சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரைக் காதலித்து வருவதாகவும், விரைவில் அவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நேரத்தில் என் அன்பான நண்பரை வதந்திகளில் இழுக்க வேண்டியதில்லை. நான் திருமணம் செய்யப்போகும் அந்த மர்ம மனிதரை நானே வெளிப்படுத்துவேன். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஆனால், யாரையும் இதுவரை தேர்வு செய்யவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

