கர்நாடக சட்டமன்றமான விதான சவுதாவில் இன்று நடைபெற்ற கெம்பேகவுடா ஜெயந்தி விழாவில் பேசிய துணை முதல்வர் சிவகுமார், “2017-ல் அப்போதைய முதல்வர் சித்தராமையாவும், பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜும், பெங்களூருவில் இரும்புப் பாலம் அமைப்பதற்கு எதிராக எழுந்த போராட்டத்தால், பயந்து அந்த திட்டத்திலிருந்து பின்வாங்கினர்.
நானாக இருந்திருந்திருந்தால் அதற்குப் பயந்து அடிபணிந்திருக்க மாட்டேன். திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருப்பேன். தற்போது, மாநிலத்தில் சப்வே, மேம்பாலங்கள் கட்டுவதற்கு என்னிடம் பல கோரிக்கைகள் வருகின்றன” என்று கூறினார்.சிவகுமாரின் இத்தகையப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இருப்பினும் இது குறித்துப் பேசிய மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே, “சித்தராமையாமையா பயந்துவிட்டார் என்று நான் கூற மாட்டேன். அவர் மக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பவர். சில சமயங்களில் தவறான திரிக்கப்பட்ட கதைகள் பரவி, நல்ல முடிவுகள் எடுப்பதில் தாமதமாகும். அதைத்தான் சிவகுமாரும் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்” என்றார்.

