கடத்த சில நாட்களாக ஹரியானாவில் மத கலவரம் நடந்து வரும் நிலையில் 6 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். நேற்று பஜ்ரங் தாள் எனப்படும் அமைப்பு டெல்லியில் பேரணி நடத்தியது. டெல்லி ஹரியான எல்லையில் பல கடைகளும் ஒரு மசூதியும் எரிக்கப்பட்டது. அப்போது நடந்த போராட்டத்தில் போலீஸ் முன்னிலையில் நல்ஹர் சிவன் கோவிலுக்குள் இருந்து சிலர் துப்பாக்கியால் சுடுவதைப் காணமுடிந்தது. அங்கு ‘பஜ்ரங் தல் சோனிபட் ஹரியானா‘ என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்டில் பல ‘செயல்பாட்டாளர்கள்’ இருந்தனர்.
துப்பாக்கியைப் பயன்படுத்திய ‘அசோக் பாபா’ எனப்படும் வழக்கறிஞர் , ஃபரிதாபாத் பஜ்ரங் தள் செயல்பாட்டாளர் ஆவார். அவர் சமீபத்தில் ஹரியானா போக்குவரத்து அமைச்சர் மூல்சந்த் சர்மாவை சந்தித்ததை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
ஃபரிதாபாத்தைச் சேர்ந்த அசோக் பாபா, மாடுகளை கொண்டு செல்லும் முஸ்லிம்களின் மீதான பல தாக்குதல்களில் மோனு மனேசரின் கூட்டாளியாக இருந்துள்ளார். அவர் மோனு மானேசருடன் அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம். இந்த மோனு மனேசரின் வீடியோவே ஹரியானாவில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவில் ஆகஸ்ட் 5 வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் அங்கு ஆகஸ்ட் 5 வரை இணையதளம் முடக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
144 தடை உத்தரவு: 144 தடை உத்தரவு அமலில் உள்ள காலகட்டத்திலேயே அங்கு கலவரங்கள் போலீசார் முன்பே நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஹரியானா முதல்வர் நேற்று செய்தியாளர்களுக்கு பெட்டி அளிக்கையில் போலிசால் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.









