Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உலகின் முக்கியமான பிரச்சினைகளை ஜி-20 மன்றத்தின் மூலம் தீர்க்கலாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உலகின் முக்கியமான பிரச்சினைகளை ஜி-20 மன்றத்தின் மூலம் தீர்க்கலாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ஜி-20 மன்றத்தின் மூலம் பருவநிலை மாற்றம், வறுமை போன்ற உலகின் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சார்பிலான சுற்றுலா குறித்த ஜி-20 உச்சி மாநாடு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதன் நிறைவு விழா சென்னை தரமணியில் உள்ள அதன் வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராகப் பங்கேற்று, பல்கலைக்கழக வளாகத்தை பார்வையிட்டார்.

விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது: தற்போதைய காலத்தில் டிஜிட்டல் இந்தியா மிகவும் அவசியமானதாகும். அதைக் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாகும். அதனால் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. உலக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களில் 45% பேர் இந்தியாவில் உள்ளனர். டிஜிட்டல் இந்தியாவால் மட்டுமே இது சாத்தியமானது. இதன்மூலம் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.

இதுதவிர டிஜிட்டல் இந்தியா மூலம் மக்கள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர். உதாரணத்துக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் முறைகேடுகள் இல்லாமல் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. அதேபோல், விரைவில் பொருளாதாரத்தில் உலகளவில் இந்தியா முதல் 3 இடங்களில் இடம்பெறும். தற்போது கல்வி, வேலைவாய்ப்பில் அதிகளவில் பெண்கள் இடம் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த ஜி-20 மன்றத்தின் மூலம் பருவநிலை மாற்றம், வறுமை போன்ற உலகின் பல முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் ஜி-20 உறுப்பு நாடுகளின் தூதரக அதிகாரிகள், சட்டப் பல்கலை. துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

.

Tags: ஆர.என.ரவஆளநரஉரஉலகனதரககலமபரசசனகளமககயமனமலமமனறததனஜ20
Previous Post

சென்னை தினம் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

Next Post

சென்னை பல்கலை.க்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை பல்கலை.க்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரம்

சென்னை பல்கலை.க்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In