Chennai oi-Velmurugan P
Published: Tuesday, June 20, 2023, 20:30 [IST]
சென்னை : பெண்கள் பாதுகாப்பு புதிய திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 1091, 112 ஆகிய எண்களுக்கு அழைத்தால் ரோந்து வாகனம், பெண்களை இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்லும்இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் பாதுகாப்புக்கென புதிய திட்டம் ஒன்றை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல்துறையன் உதவி எண்கள் 1091, 112,, 044 -23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்க்கு அழைக்கலாம். காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அனைத்து நாள்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இலவசமாகும்” இவ்வாறு தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் செய்யாவிட்டால் வேறு யாராலும் செய்ய முடியாது! உடன்பிறப்புகளுக்கு உரமேற்றிய ஸ்டாலின் உரை!
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Tamil Nadu Police has launched a new scheme called Women Protection New Scheme. According to this, if you call the numbers 1091, 112, the patrol vehicle will pick up the women at their place, the police has announced that you can use this service.
Story first published: Tuesday, June 20, 2023, 20:30 [IST]

