Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது: ஐகோர்ட்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணை காட்ட முடியாது: ஐகோர்ட்
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கருணைக் காட்டக்கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த ஞானபிரகாசம், கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அதிகாரிகளிடம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கியும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒரு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு எது சரி? எது தவறு? என தீவிர ஆலோசனை நடத்திய பிறகு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அந்த உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்துவதில்லை.

நீதிமன்ற உத்தரவு தானே என்ற அலட்சிய போக்குடன் அதிகாரிகள் உள்ளனர். இதனை ஏற்கமுடியாது. இது போன்ற அவமதிப்பு வழக்குகளின் அடிப்படையில் ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும். அது தான் நீதியாகவும் இருக்கும்.

மக்கள் வரிப்பணத்தில சம்பளம் பெற்றுக் கொண்டு, அதற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை ஏற்க முடியாது. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற அதிகாரிகள் மீது கருணை காட்டக் கூடாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். விசாரணை ஜூலை 24க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

.

Tags: அதகரகளஉததரவஐகரடகடடகரணநதமனறநறவறறதமடயதமத
Previous Post

கலைஞர் உரிமை தொகை.. குடும்ப தலைவிகளே இதுதான் கட்டாயம்.. இல்லாட்டி உடனே வாங்குங்க!

Next Post

போச்சுடா.. ஏற்கனவே 7ம் பொருத்தம்.. இதுல இதுவேறயா! வடகொரியா எல்லையில் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போச்சுடா.. ஏற்கனவே 7ம் பொருத்தம்.. இதுல இதுவேறயா! வடகொரியா எல்லையில் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்

போச்சுடா.. ஏற்கனவே 7ம் பொருத்தம்.. இதுல இதுவேறயா! வடகொரியா எல்லையில் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In