தமிழகத்தில் மே 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அன்று முதல் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லுரிகள், பாலிடெக்னிக், இசை, சட்டம் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்வேறு பயிற்சி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கையும் துவங்கவுள்ளது.

