கடந்து ஆண்டு நடந்த பொதுக்குழுவுடன் அ.தி.மு.க.,வுக்கு அவர்கள் சமாதிக்காட்டி விட்டார்கள் என்பதை உணர்ந்து, இன்றைக்கு அ.தி.மு.க தொண்டர்கள், அ.ம.மு.க., தொண்டர்களுடன் தமிழகம் முழுவதும் கைகோர்த்து வருகிறார்கள். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பு எது எல்லாம் தமிழகத்திற்கு வேண்டாம் என்ற போராட்டம் நடத்தினரோ, அதை எல்லாம் விட்டு விட்டு, தற்போது கொடுங்கோல் ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார் என்பது தான் உண்மை.
விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தேன் தடவிய வார்த்தைகளில் பேசிய ஸ்டாலின் தற்போது திரவகத்தை ஊற்றி தமிழக மக்களை நோகடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்ககூடிய காலம் நெருங்கி விட்டது. ஜெயலிலதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்படும் போது, நிச்சயம் தி.மு.க என்னும் தீயச்சகதியை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும். ஒரு சில சுயநலாவதிகளை அப்புறப்படுத்தி விட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

